கோவை, டிசம்பர் 5
எம்.எஸ்.எம்.இ - டிஐ, கோயம்புத்தூர் சிட்கோ இன்டஸ்ட்ரீயல் எஸ்டேட் உற்பத்தியாளர் சங்கம் (கொடிசியா) உடன் இணைந்து "MSME EXPO -2017" என்ற கண்காட்சியினை நடத்த உள்ளன.
எம்.எஸ்.எம்.இ பிரிவில் முன்னணி உற்பத்தி மையமாக இந்தியா திகழும் வகையில் மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டான்ட் அப் இந்தியா, ZERO DEFECT ZERO EFFECT போன்ற திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தார். இந்த எம்.எஸ்.எம்.இ துறையானது அரசாங்கத்தின் ஆதரவுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக கணிசமாக பங்களிப்பு செய்து வருகிறது.
அதன்படி, எம்.எஸ்.எம்.இ -டிஐ, கொடிசியா உடன் இணைந்து "MSME EXPO -2017" என்ற கண்காட்சியினை வரும் டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய இரு தேதிகளில் பீளமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பத்மாவதியம்மாள் மண்டபத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.
MSME-EXPO 2017 மூலம் இந்தியாவின் முக்கிய உற்பத்தியாளர்கள் மற்றும் பல பெரிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சந்திக்க ஒரு தனித்துவமான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில், 80-க்கும் மேற்பட்ட எம்.எஸ்.எம்.இ சிறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, அவற்றின் எந்திர வசதிகள் மற்றும் 20 முக்கிய பொதுத்துறை நிறுவனங்கள், 10-க்கும் மேற்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பங்கேற்க உள்ளன. புதிய தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இது பயனளிக்கும்.
மேலும், இலவச கருத்தரங்கைத் தவிர இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக பயிற்சிப் பட்டறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
எம்.எஸ்.எம்.இ - டிஐ, கோயம்புத்தூர் சிட்கோ இன்டஸ்ட்ரீயல் எஸ்டேட் உற்பத்தியாளர் சங்கம் (கொடிசியா) உடன் இணைந்து "MSME EXPO -2017" என்ற கண்காட்சியினை நடத்த உள்ளன.
எம்.எஸ்.எம்.இ பிரிவில் முன்னணி உற்பத்தி மையமாக இந்தியா திகழும் வகையில் மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டான்ட் அப் இந்தியா, ZERO DEFECT ZERO EFFECT போன்ற திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தார். இந்த எம்.எஸ்.எம்.இ துறையானது அரசாங்கத்தின் ஆதரவுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக கணிசமாக பங்களிப்பு செய்து வருகிறது.
அதன்படி, எம்.எஸ்.எம்.இ -டிஐ, கொடிசியா உடன் இணைந்து "MSME EXPO -2017" என்ற கண்காட்சியினை வரும் டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய இரு தேதிகளில் பீளமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பத்மாவதியம்மாள் மண்டபத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.
MSME-EXPO 2017 மூலம் இந்தியாவின் முக்கிய உற்பத்தியாளர்கள் மற்றும் பல பெரிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சந்திக்க ஒரு தனித்துவமான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில், 80-க்கும் மேற்பட்ட எம்.எஸ்.எம்.இ சிறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, அவற்றின் எந்திர வசதிகள் மற்றும் 20 முக்கிய பொதுத்துறை நிறுவனங்கள், 10-க்கும் மேற்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பங்கேற்க உள்ளன. புதிய தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இது பயனளிக்கும்.
மேலும், இலவச கருத்தரங்கைத் தவிர இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக பயிற்சிப் பட்டறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.